Sarkar Premalatha Vijayakanth :சர்கார் படத்தை ஓட வைக்கவே சர்ச்சையான காட்சிகளை படமாக்கி இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது என பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த படம் சர்கார்.
இந்த படத்தில் அதிமுக அரசின் இலவச பொருட்களை தீயிலிட்டுக் கொளுத்துவது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதனால் படத்திற்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்திருந்தன. அதன் பின்னர் தயாரிப்பு நிறுவனம் இந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்கி இருந்தது.
இந்த நிலையில் தற்போது பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் சர்கார் சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.
திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும். பட காட்சிகளுக்காக மோதல்களில் ஈடுபடக் கூடாது என கூறியுள்ளார்.
மேலும் படங்களில் சர்ச்சையான காட்சிகளை வைத்து அதன் மூலம் படத்தை ஓட்ட முயற்சி செய்வதாகவும் எண்ணத் தோன்றுகிறது.
நடிகர் விஜய் படங்களில் நடிக்கும் போது அடுத்தவர்களையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு கூறி இருப்பது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.