முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து அடுத்து அதே நேரத்தில் ஒளிபரப்பாக போகும் சீரியல் இன் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் அழகான காதல் கதையாக ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் பிறகு தோழி வெண்பாவின் பேச்சை கேட்டுக் கொண்டு பாரதி கண்ணம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப அதன் பிறகு கண்ணம்மா தனியாக வசித்து இரண்டு குழந்தைகளை பெற்று அந்த குழந்தைக்கு பாரதி தான் அப்பா என டி என் ஏ டெஸ்ட் மூலம் நிரூபிக்க போராடினாள்.
ஆனால் தொடர்ந்து டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு மறுப்பு தெரிவித்து வந்த பாரதி ஒரு கட்டத்தில் அவராகவே டெஸ்ட் எடுத்து இரண்டு குழந்தைகளுக்கு தான் அப்பா என தெரிந்து கொண்டதும் சீரியல் முடிவுக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக இனி பாரதியுடன் சேர்ந்து வாழ முடியாது என கண்ணம்மா குழந்தைகளை தூக்கிக்கொண்டு வேறொரு ஊருக்கு சென்று விட்டாள்.
கண்ணம்மாவை தேடி அந்த ஊருக்கு சென்ற பாரதி அங்கு பாண்டி என்பவனிடம் தலையில் அடி வாங்கி பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்து விட கண்ணம்மா தற்போது பாரதியின் நினைவை மீட்டுக் கொண்டு வர முயற்சி செய்ய தொடங்கியுள்ளார். பாரதிக்கு பழைய நினைவுகள் வந்தவுடன் கண்ணம்மா மீண்டும் அவனை ஏற்றுக் கொள்ள உள்ளார் என சொல்லப்படுகிறது.
இதன் மூலம் இந்த சீரியல் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து இந்த சீரியலுக்கு பதிலாக இதே நேரத்தில் ஒளிபரப்பாக உள்ள சீரியலையும் பிரவீன் பென்னன்ட் தான் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.