சினேகாவுடன் 10 வருட திருமண வாழ்க்கை குறித்து பதிவு செய்துள்ளார் பிரசன்னா.
Prasanna About 10th Marriage Anniversary : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர் சமீபத்தில் தன்னுடைய பத்தாவது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார்.
தன்னுடைய திருமண நாள் தினத்தில் தன்னுடைய மனைவி சினேகா குறித்தும் அவருடனான திருமண வாழ்க்கை குறித்து பதிவு செய்துள்ளார். இந்த பத்து வருட திருமண வாழ்க்கையில் நான் உங்களிடம் நிறைய சண்டை போட்டிருக்கேன் இருவருக்கும் இடையே மனக்கசப்பு உருவாகியுள்ளது. நான் கொடுத்த வாக்குறுதிகளை மீறி விட்டேன். உங்கள் மனதை பலமுறை உடைத்து உள்ளேன். அப்படி இருந்தும் நீங்கள் என்னிடம் அன்பை மட்டுமே காட்டினீர்கள். என்னுடைய உண்மையான அன்பால் என்னை மீண்டும் மீண்டும் வென்று விட்டீர்கள். தற்போது என்னுடைய மனசு மற்றும் ஆன்மா முழுவதும் நீங்கள் மட்டும்தான் நிறைந்து இருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்தப்பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.