Prajin Sandra Amy : திருமணமாகி 10 வருடங்கள் ஆன பிறகு குழந்தைகள் பெற்று கொள்வது ஏன்? தாமதத்திற்கு காரணம் என்ன என்பது பற்றி சாண்ட்ரா விளக்கமளித்துள்ளார்.
சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபல நடிகர் நடிகைகளாக வலம் வரும் தம்பதி ப்ரஜன், சாண்ட்ரா எமி.
சமீபத்தில் ப்ரஜன் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
வசூலில் தமிழ் சினிமாவை அதிர வைத்த டாப் 10 படங்கள் – அஜித், விஜய்க்கு என்ன இடம்?
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். அதே சமயம் குழந்தை பெற்று கொள்ள 10 வருடம் தாமதம் ஏன் எனவும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கு சாண்ட்ரா விளக்கமளித்துள்ளார் அதாவது நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
அந்த தருணத்தில் எங்களிடம் பணமும் இல்லை, உதவ ஆளும் இல்லை. பழைய உடைகளை மட்டும் கொண்டு தான் வாழ்க்கையை நடத்தி வந்தோம்.
மேலும் ப்ரஜனும் சில காலம் வேலையில்லாமல் இருந்தார். சின்னத்தம்பி சீரியல் மூலம் தற்போது தான் ஒரு பிரேக் கிடைத்துள்ளது. இதனால் தான் இந்த கால தாமதம் என குறிப்பிட்டுள்ளார்.