சர்ச்சை கிளப்பிய பழைய பதிவுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி லவ் டுடே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருப்பவர் பிரதீப் ரங்கநாதன்.
இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது.
இப்படியான நிலையில் பிரதீப் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னதாக யுவன் சங்கர் ராஜா, சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்களை தகாத வார்த்தையில் பேசி முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்ததாக சில புகைப்படங்கள் பரவி சர்ச்சைகளை கிளப்பின.
இப்படியான நிலையில் பிரதீப் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது சில பதிவுகள் உண்மைதான் ஆனால் கெட்ட வார்த்தைகள் அனைத்தும் போட்டோஷாப் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டவை. நானும் தவறு செய்துள்ளேன், சிறுவயதில் இதெல்லாம் சாதாரணம்தானே. தற்போது ஒவ்வொரு நாளும் தன்னை நல்ல மனிதராக மாற்ற தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன் என பிரதீப் தெரிவித்துள்ளார்.
ஒரு வார்த்தை மாறினாலும் அதன் முழு அர்த்தமும் மாறிவிடும் அதன் காரணமாகவே நான் என்னுடைய முகநூல் பக்கத்தை டிஆக்டிவேட் செய்து விட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.