மீண்டும் அப்பாவாகி உள்ளார் நடிகர் பிரபுதேவா.
இந்திய திரையுலகில் நடிகர் டான் மாஸ்டர் இயக்குனர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பிரபுதேவா. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய மூன்று மகன்கள் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய முதல் மனைவியை பிரிந்தார்.
அதன் பிறகு நயன்தாராவை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில் இவர்கள் இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிசியோதெரபி டாக்டர் ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஹிமானி சிங் தனியார் மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்தும் அந்த தகவலை வெளிவிடாமல் இருந்து வந்த நிலையில் இருவரும் திருப்பதி சென்று வந்தனர்.
தங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததனால் ஏழுமலையானுக்கு நன்றி சொல்லவே இவர்கள் சாமி தரிசனம் செய்வதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபுதேவாவின் அப்பா சுந்தரம் மாஸ்டர் குடும்பத்தில் இதுவரை பெண் குழந்தைகளை இல்லாத நிலையில் தற்போது தற்போது வம்சத்தின் முதல் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி.
இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.