Poonam Pandey Husband Arrested
Poonam Pandey Husband Arrested

திருமணமான பத்து நாளில் கணவன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார் பூனம் பாண்டே. பிறந்தநாள் அவரது கணவர் சாம் பாம்பே கைது செய்யப்பட்டுள்ளார்.

Poonam Pandey Husband Arrested : பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. எப்போதும் சமூக வலைதளப் பக்கங்களில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆடையில்லாமல் வீடியோக்களை வெளியிடுவதில் வல்லவர்.

இவர் பனிரெண்டு நாட்களுக்கு முன்பு தான் தன்னுடைய காதலரான சாம் பாம்பே என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஹனிமூன் சென்ற இவர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இரட்டை அர்த்தத்துடன் ரொமான்டிக்காக பேசி ரசிகர்களை சூடாக்கி வந்தனர்.

தன்னுடைய கணவருடன் சேர்ந்து கண்டபடி வீடியோ வெளியிட்டிருந்தார் பூணம் பண்டே. மேலும் ஹனிமூனை சிறப்பாக கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தார்.

இப்படியான நிலையில் போலீசிலும் தன்னுடைய கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், தன்னை அடித்ததாகவும், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் சாம் பாம்பேவை கைது செய்துள்ளனர்.

பூனம் பாண்டேவின் சமூக வலைதள பதிவுகளை பார்த்த ரசிகர்கள் சாம் பாண்டே உங்களை துன்புறுத்தி இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி கண்டதையும் பதிவுகளை பதிவிட விட்டு இப்போது போலீசில் புகார் அளிப்பது ஏன் என ரசிகர்கள் விளாசி எடுத்து வருகின்றனர்.