pooja

பிரபல மராத்தி நடிகை பூஜா சூஞ்சார் (25) பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் தங்கி இருந்தார்.

கடந்த 21ம் தேதி அதிகாலை அவருக்கு பிரசவலி ஏற்பட்டது. எனவே, கோரேகானில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தை இறந்துவிட்டது.

மேலும், பூஜாவின் உடலும் மோசமானது. எனவே, அவரை ஹிங்கோலி சிவில் ஹெல்த் செண்டருக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் உடனடியாக கிடைக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னே ஆம்புலன்ஸ் வந்தது. அதன்பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், பாதி வழியிலேயே அவரும் மரணமடைந்தார்.

சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைத்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என அவரின் உறவினர்கள் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.