விமான ஊழியரை பற்றி பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Pooja Hegde post about flight attendant:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வெளியான படம் தான் ராதே ஷாம். இந்த படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் இடையே கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.

அதன்பின் பூஜா ஹெக்டே அவர்கள் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா அவருடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதி விடுவார். அதுபோல் தற்போது இண்டிகோ விமான ஊழியரை பற்றி பதிவிட்டுள்ளார்.

அது என்னவென்றால் மும்பையில் இருந்து புறப்படும் இண்டிகோ விமானம் ஊழியரான ‘விபுள்நாகேஷ்’ என்பவர் என்னிடம் காரணமே இல்லாமல் அச்சுறுத்தும் வகையில் கடுமையாக நடந்து கொண்டார் என்று பதிவிட்டுள்ளார். எப்போதும் நான் இந்த மாதிரியான பதிவுகளை போட்டது இல்லை ஆனால் இது உண்மையில் மிகவும் பயங்கரமாக இருந்தது என்று கூறியுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.