Ponniyin Selvan : பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகி கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் மல்டி ஸ்டார் படங்களை இயக்குவதில் வல்லமை படைத்தவர்.
இறுதியாக இவர் இயக்கி இருந்த செக்க சிவந்த வானம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று சிறப்பு மிக்க நாவலை தழுவிய படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளர்.
இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, விஜய், விக்ரம், ஜெயம் ரவி என பலரிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
நடிகர் விஜய் இப்படத்தில் நடிக்க தயக்கம் காட்டி வரும் நிலையில் விஜய் சேதுபதியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விலகி கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆதரிச்சியடைந்துள்ளனர். மேலும் பொன்னியின் செல்வன் படமும் திட்டமிட்டபடி உருவாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.