Ponniyin Selvan : தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.
இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.
இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
விஜய் சேதுபதியின் அடுத்த பட டைட்டில் இதுதான் – உற்சாகத்தில் ரசிகர்கள்!
மேலும் நயன்தாராவும் இப்படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுஒருபக்கம் இருக்க தற்போது அமலா பாலும் இப்படத்தில் இணைந்துள்ளாராம்.
இவர் நயன்தாராவுக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறொரு வேடத்தில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.
பாகுபலி பாணியில் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் 800 கோடியில் இருந்து 1000 கோடியைத் தொடுமாம்.
இதன்மூலம் இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் எனும் சிறப்பு சாதனையை இப்படம் நிகழ்த்தவுள்ளது.