பொன்னியின் செல்வன் படத்தின் “டீசரை” நாளை வெளியிடப் போவதாக பாடக்குழு அதிக ஆர்வபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிகப்பெரிய பிரம்மாண்ட கதையான ‘கல்கி புகழ் பெற்ற பொன்னியன் செல்வன் நாவலை’ அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கி வரும் படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்திக்,ஜெயம் ரவி, திரிஷா பிரகாஷ்ராஜ், பிரபு போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்க உள்ளது. மேலும் இப்படத்தின் கதாபாத்திரங்களை குறித்த தகவல்களை பட குழு வெளியிட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்திற்கான “டீசரை” குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்திற்கான “டீசர்” 8 ஆம் தேதியான நாளை 6 மணிக்கு வெளியாகும் என்ற அதிகாரவபூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.