பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாவது உண்மையா? பொய்யா? என்பது குறித்த கேள்விக்கு விக்ரம் பதிலளித்துள்ளார்.
Ponniyin Selvan Movie Update : கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என என்று எண்ணி அதற்கான முயற்சிகளை எடுத்து தோல்வியை சந்தித்த பிரபலங்கள் பலர் உள்ளனர்.
அப்படியான ஒரு கதையை தான் மணிரத்தினம் படமாக இயக்க இருப்பதாகவும் அதற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தன.
பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!
மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக அவரே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார், அதே போல் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் விக்ரம் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாவது உண்மை தான். நானும் நடிக்கிறேன்.
கிட்டத்தட்ட பெரும்பாலான நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து முடிந்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் விக்ரம் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.