Ponniyin Selvan Heroine : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் கடந்த ஆண்டு வெளியான செக்கச்சிவந்த வானம் படத்தின் மூலம் அதிரடியான கம்பேக் கொடுத்தார்.
இதைதொடர்ந்து தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க மணிரத்னம் தயாராகி வருகிறார்.
ரஜினி, முருகதாஸால் தமிழுக்கு வந்த அமிதாப் பச்சன் – நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட சூர்யா.!
கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆறு மாதம் வரை இப்படத்திற்கு தொடர்ச்சியாக கால்ஷீட் வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என ஒரு தகவல் கசிந்துள்ளது.
கமர்ஷியல் நாயகியாக தனது கேரியரை துவங்கிய கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்திற்கு பின் பேசப்படும் நடிகையாக உரு பெற்றார்.
தற்போது மணிரத்னம் படத்தில் நடிப்பது அவரது கேரியரில் மற்றொரு மைல்கல்லாய் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு இறுதியில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் அதற்கான முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.