Ponniyin Selvan : தமிழ் சினிமாவ பொறுத்தவரைக்கும் இயக்குநர்களோட காலமுங்குறது ரொம்பவே குறைவாதான் பார்க்கப்படும்.
மகத்தான பல படங்கள கொடுத்த இயக்குநர்கள் கூட ஒரு கட்டத்தில அவுட் டேட் ஆகி படம் எடுக்கிறத கைவிட்டுடுவாங்க.
பொன்னியின் செல்வன் படத்துக்காக முதல்முறையாக மணிரத்னம் எடுக்கும் ரிஸ்க்!
ஆனா 80-கள்ல அறிமுகமான காலத்தில இருந்து இப்ப வரைக்கும் தமிழ் சினிமாவோட முன்னணி இயக்குநராவே வலம் வர்றாரு மணிரத்னம்.
செக்கச்சிவந்த வானம் கொடுத்த உற்சாகத்தில இப்ப அடுத்ததா தன்னோட கனவு படமான பொன்னியின் செல்வன உருவாக்க மணிரத்னம் தயாராகிட்டு வர்றாரு.
கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சத்யராஜ்னு இந்திய அளவில இருந்து பல நடிகர்கள் இந்த படத்தில நடிக்கவிருக்காங்க.
நாளுக்குநாள் இப்படம் குறித்த அப்டேட் வந்துகொண்டே இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.
அது என்னவென்றால் இப்படத்திற்கு மணிரத்னத்தின் ஆஸ்தான பாடலாசிரியர் வைரமுத்து பாடல் எழுதுகிறாராம்.
ரோஜாவில் ஆரம்பித்து மணிரத்னம் – ரகுமான் – வைரமுத்து கூட்டணி செக்கச்சிவந்த வானம் வரை ஒரு படம் விடாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
எனினும் வைரமுத்து அண்மையில் மீ டூ விவகாரத்தில் சிக்கியதால் இனி ரகுமான் படத்திற்கு அவர் பாடல் எழுதுவது சிரமம் என்று சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது அவர் இப்படத்தில் இணைந்திருப்பதாக சொல்லப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.