நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police Guard to Suriya Home : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் நாளை உலகம் முழுவதும் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேசமயம் ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததற்காக வன்னிய மக்களிடம் சூர்யா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் அப்போதுதான் கடலூர் மாவட்டத்தில் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காமல் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திட்டமிட்டபடி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.