கொடைக்கானலில் இருந்து அனுமதியின்றி சென்ற நடிகர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Police Action on Vimal And Soori : பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், கடந்த 17ம் தேதி பேரிஜம் வனப்பகுதிக்கு விதிகளை மீறி சென்ற நடிகர்கள் விமல். சூரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சிவகுமார், காவல்துறையில் புகார் அளித்தார்.
தென்னிந்திய அளவில் ட்விட்டரில் அதிகம் ரசிகர்களை வைத்துள்ள நடிகர்கள் யார் தெரியுமா? – டாப் 10 லிஸ்ட்
அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் பேரிஜம் பகுதிக்கு சென்ற நடிகர்களுக்கு உதவுவதற்காக, கொடைகனல் மற்றும் வடகவுஞ்சி- ஐ சேர்ந்த காதர்பாட்சா, காமாட்சி ஆகியோர், ஒரு ஜீப் மற்றும் கார் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளனர்.
இந்த வாகனங்களை, போலீசார் கைப்பற்றி கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் காதர்பாட்சாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.