ஏப்ரல் 14 க்கு பின்னரும் சாலைகளில் மக்கள் நடமாடக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
PM Order to States Government : உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட ஆயிரத்து 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் இன்று வரை 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஊரடங்கு உத்தரவு குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
அப்போது அவர் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னரும் அதாவது ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னரும் மக்கள் அதிகமாக சாலைகளில் நடமாடக் கூடாது, மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கூறியிருப்பதாக அருணாச்சல பிரதேச முதல்வர் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.