செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திரையரங்குகளில் பிறர் தர வாரா திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Pirar Thara Vaara Movie Release : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல நூறு திரைப்படங்கள் வெளியாகின்றன. தற்போது திரையரங்குகள் மூடப்பட்டு இருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் மீண்டும் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் ஏ ஆர் காமராஜ் இயக்கி தயாரித்து நடித்துள்ள பிறர் தர வாரா திரைப்படம் செப்டம்பர் 17ம் தேதி முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சம்பத் ராம், ருத்ரன், அபு, ஹரி, புருஷ், சேகர், ராஜன், நிவேதா லோகஸ்ரீ, இன்னும் பலர் இணைந்து நடித்துள்ளனர். டேவிட் – கோகுல் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்ய ஹரிபிரசாத் படத்தொகுப்பையும், ஜாக் வாரியர் இசையையும் கவனித்துள்ளார்.
சிட்டிக்குள் நடக்கும் குழந்தை கடத்தலையும் யார் இருக்கிறார்கள் என்பதையும் போலீஸ் அதிகாரி காமராஜ் கண்டுபிடித்தாரா? இதற்கிடையில் என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை.