விரைவில் பிச்சைக்காரன் 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு உருவாக இருப்பதாக விஜய் ஆண்டனி உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்து தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடித்து இருந்தார்.

மேலும் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் பிச்சைக்காரன் 3-ஆம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது, ‘பிச்சைக்காரன் 3’ திரைப்படம் விரைவில் உருவாகவுள்ளதாகவும் இந்த பாகத்தின் திரைக்கதை முற்றிலும் வித்தியாசமான கதைகளைத்துடன் இருக்கும் என்றும் விஜய் ஆண்டனி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.