ஷூட்டிங் ஸ்பாட்டில் நடு இரவில் நடிகை மீரா மிதுன் 6 பேருடன் தப்பி ஓடிவிட்டதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Peyai Kaanom Director Complaint on Meera Mitun : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சர்ச்சைக்குரிய ஒருவராக பிரபலமானவர் மீரா மிதுன். தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார்.
சதம் அடித்து, செம ஸ்டைல் :
ரஜினியை ஃபாலோ செய்த வெங்கடேஷ்..
தன்னைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக் கொண்ட இவர் பிரபலங்கள் பற்றியும் அவர்களின் ஜாதி குறித்து தவறாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கி ஜெயிலுக்குப் போய் கம்பி எண்ணி விட்டு வெளியே வந்தார். இவர் ஏற்கனவே நடித்து வந்த பேயை காணோம் என்ற படத்தின் படப்பிடிப்புகளில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பின்னர் கலந்து கொண்டார்.
குப்பத்துல வராத Corona..அமெரிக்கா Airport-ல வந்துடுச்சு -மேடையில் கலாய்த்த கமல்..! | SNSM | Audio HD
படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் அதன் பிறகு கொடைக்கானலில் நடத்த படக்குழு திட்டமிட்டது. இதற்காக கொடைக்கானல் சென்று படப்பிடிப்புகளை நடத்தி வந்த நிலையில் ஷூட்டிங் முடிய இரண்டு நாட்களே இருந்த நிலையில் நடு இரவில் யாருக்கும் தெரியாமல் மீராமிதுன் ஆறு பேருடன் தப்பிச் சென்றுவிட்டதாக படத்தின் இயக்குனர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் இப்ப என்ன செய்யப் போறீங்க எனக் கேட்டபோது மீராமிதுன் இல்லாமலேயே என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யலாம் என முடிவெடுத்து அதற்கேற்றார் போல படத்தின் கதையை மாற்றியதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பேயை காணோம் என தேட போன இடத்தில் மீரா மிதுனை காணவில்லை என தேடினோம் என கூறியுள்ளார்.