Petta Story : பேட்ட படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடிக்க விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசி குமார், நவாஸுதீன் சித்திக் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் சசிகுமாரின் முஸ்லிமாக ரஜினியின் நண்பராக மாலிக் என்ற பெயரில் நடித்துள்ளார். இவர் இந்து பெண் ஒருவரை காதலிப்பாராம்.
இதனால் பெண் வீட்டார் இவரை கொண்டு விடுவார்கள். இதில் இருந்து தான் படத்தின் கதை விறுவிறுப்படைய தொடங்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது சுருக்கமாக சொன்ன போனால் பேட்ட படம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆவனக்கொலை பற்றி பேசும் படமாக இருக்கும் என கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் படத்தின் ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் பாஷா படத்தின் அளவிற்கு இருக்கும் எனவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.