Petta Story : பேட்ட படத்தின் கதை இது தான் என தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பேட்ட படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இப்படத்தின் மூலம் முதல் முறையாக ரஜினியுடன் அனிருத் இணைந்து இருப்பதால் படத்தின் மீது எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதே சமயம் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உச்சத்திற்கு கொண்டு போயுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதை இது தான் என தகவல் ஒன்று இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
ஆம், அது என்னவென்றால் இப்படம் முஸ்லீம் மற்றும் ஹிந்துக்களுக்கு இடையே நடக்கும் ஆவண கொலைகளை பற்றி பேசும் படமாக இருக்கும் என்பது தான்.
படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் கதை இது தான், அது தான் என தகவல்கள் வைரலாகி வருகிறது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கலுக்கு இப்படம் வெளியானால் தான் கதை என்ன என்பது உறுதியாக தெரியும்.