Petta Release Issue : சொல் பேச்சை கேட்காமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆந்திராவிலும் பேட்ட படத்தை ரிலீஸ் செய்வதால் படத்திற்கு தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் மெகா ஸ்டார், சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பேட்ட படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் நாளை முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாக உள்ளது.
ஆனால் தமிழகத்தில் பேட்ட படத்திற்கு கிடைத்ததை விட ஆந்திராவில் மிகவும் குறைந்த அளவிலேயே தியேட்டர்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதற்கான காரணம் நாளை தெலுங்குவில் பாலகிருஷ்ணா நடிக்கும் ‘என்.டி.ஆர்” மற்றும் ராம் சரண் நடிக்கும் ‘வினய விதேய ராமா’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசாக உள்ளது.
இவை இரண்டுமே முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்கள் என்பதால் விநியோகிஸ்தர்கள் பேட்ட படத்தை தெலுங்குவில் ஜனவரி 26-ம் தேதி வெளியிடுமாறு கேட்டு கொண்டுள்ளனர்.
ஆனால் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதெல்லாம் முடியவே முடியாது, உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் ரிலீஸ் என கூறி ஆந்திராவிலும் ரிலீஸ் செய்கிறது.
இதனால் பேட்ட படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் 10 % தியேட்டர்கள் தான் கிடைத்திருப்பதாகவும் மீதமுள்ள 90 % தியேட்டர்கள் நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.