Petta Rajinikanth : பேட்ட படம் எப்படி இருக்கு? தன்னுடைய கெட்டப் எப்படி இருக்கும் என்பதை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி,பாபி சிம்ஹா, சசிகுமார், நவாஸுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா என பலர் இணைந்து நடித்துள்ள படம் பேட்ட.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் படு பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, விஜய் சேதுபதி, சசிகுமார் மாறும் படக்குழுவினர் பற்றி பேசியுள்ளார்.
சிம்ரன் தான் எனக்கு ஜோடினு தெரிந்ததும் எல்லாருமே சந்தோஷப்பட்டாங்க, த்ரிஷா பிளாஷ் பேக் ஹெரோயின் தான் என்றாலும் விருப்பப்பட்டு இந்த படத்தில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி மிகவும் வித்தியாசமான மனிதர், மிக சிறந்த நடிகர்.. மாமனிதர் என புகழ்ந்து பேசியுள்ளார். அதேபோல் சசிகுமார் குழந்தை மாதிரி என கூறியுள்ளார்.
அனிருத் தான் அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் அந்த அளவிற்கான திறமை அனிருத்திடம் உள்ளது என கூறியுள்ளார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் கதை விதமே தனி. அதனை நீங்களே பேட்ட படத்தில் பார்ப்பீர்கள் என கூறியுள்ளார்.
கார்த்திக் என்னை இந்த படத்தில் 90-களுக்கு கொண்டு சென்று விட்டார், ஒரு குழந்தையை போல என்ன வித்தியாசமான உடைகளில் மிகவும் அழகாக நடிக்க வைத்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.