சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.35 ரூபாய் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.04 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவற்றின் அடிப்படையில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று(15.03.2019) அமலுக்கு வந்த விலை: பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு 75.35 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து, லிட்டருக்கு 71.04 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் அதிகரித்து வந்தது .இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை அதிகரித்தும் மற்றும் டீசல் விலை குறைந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.,
இது சென்னை நகருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆகும். பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விலை குறையவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு உள்ளது.