Periyar statue : புதுக்கோட்டை: அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியார் சிலை நள்ளிரவில் மர்மநபர்களால் உடைக்கப்பட்டது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே பெரியார் சிலை ஒன்று உள்ளது.
1998-ல் அமைக்கப்பட்ட இந்த சிலையின் தலைப்பகுதியை மர்ம நபர்கள் நள்ளிரவில் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தகவல் அறிந்து அங்குவந்த காவல்துறையினர் அப்பகுதியினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட பகுதியில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் எனவும் முழக்கமிட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட செயல் யாருடையது?
இதில் அரசியல் சூழ்ச்சி எதேனும் உள்ளதா? போன்ற பல கேள்விகளை முன்வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.