YouTube video

People Support to EPS : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து அதிமுகவை நிலையான கட்சியாக வலுப்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தற்போது கொரானா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த பேரிடர் காலத்திலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடுத்து வரும் அதிரடியான திட்டங்களால் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

அதேபோல கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக முதல்வர் அறிவித்த தளர்வுகளால், பொருளாதார ரீதியாகவும் தமிழகம் இந்திய அளவில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

இதனால் மக்களின் மத்தியில் எடப்பாடியாருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக தொண்டர்கள் என அனைவரையும் எடப்பாடியாரின் நிர்வாகத்திறனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

TN CM EPS Visit to Ramanathapuram

கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளராக இ.பி.எஸ்-ஐ அறிவிக்க வேண்டும் என்பதே கழகத்தினரின் ஒரே குரலாக இருந்துள்ளது.

அதே நேரத்தில் கட்சியில் அனைவரையும் அணைத்து போகும் குணமும் இ.பி.எஸ்ஸிடம் இருப்பதாகக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உணர்கிறார்கள்.

கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளை போல மக்கள் மத்தியிலும் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிக நம்பிக்கையும் மீண்டும் அவரை முதல்வராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.