மூன்று படமும் தோல்வி அடைந்த காரணத்தினால் இனி படத்தை இயக்க மாட்டேன் என கமல்ஹாசன் பட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக விளங்குபவர் பிசி ஸ்ரீராம். தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் பல படங்களில் பணியாற்றியுள்ள இவர் இயக்குனராகவும் மூன்று படங்களை இயக்கி உள்ளார்.
ஆமாம் கமல் நடிப்பில் வெளியான குருதிப்புனல், வானம் வசப்படும் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான மீரா என மூன்று படங்களை இயக்கினார். இந்த படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் பி சி ஸ்ரீராம் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனராக அதற்கு சில முயற்சிகளை எடுத்தேன் ஆனால் அது பலன் அளிக்கவில்லை. ஒளிப்பதிவு வேறு சினிமா வேறு. சினிமாவை கையாளும் திறமை என்னிடம் இல்லை. ஆகையால் இனி நான் படத்தை இயக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
மேலும் படத்தின் கதையைக் கேட்டு அந்த கதை என் மனதுக்கு பிடித்தால் மட்டும் தான் ஒளிப்பதிவு செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.