பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோரைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் ஹீரோயினியாக நடிக்க உள்ளார் விஜய் டிவி நடிகை.
Pavithra Janani Entry in Tamil Cinema : தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகைகளாக பயணத்தை தொடங்கி பின்னர் வெள்ளித்திரையில் நாயகியாக வலம் வரும் நடிகைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். குறிப்பாக விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோர் இன்று பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வருகின்றனர்.
கேப்டன் பதவிக்கு, பும்ரா பொருத்தமாக இருப்பாரா? : ஆஷிஷ் நெஹ்ரா கருத்து
இவர்களைத் தொடர்ந்து இன்னொரு விஜய் டிவி சீரியல் நடிகை வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை ஈரமான ரோஜாவே சீரியலில் நாயகியாக நடித்த பவித்ரா ஜனனி தான். இவர் தற்போது தென்றல் வந்து என்னைத்தொடும் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
ரெண்டு பேரோட Combo செம – Enemy Day 4 Common Audience Review | Vishal, Arya, Mirnalini Ravi
சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ள பவித்ரா ஜனனி மிக விரைவில் வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர் வெள்ளித்திரையில் நடிக்க உள்ள படம் பற்றிய தகவல் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.