Sardar Statue : மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள, உலகிலேயே மிக உயரமான சிலையான, பட்டேல் சிலையில் தமிழ் மொழி தவறாக உச்சரிக்கப்பட்டுள்ளது.
” The statue of unity ” (ஒற்றுமையின் சிலை) என அழைக்கப்படும் உலகிலேயே மிக உயர்ந்த சிலையான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் குறுக்கே வைக்கப்பட்டுள்ள இந்த சிலை, மிக பிரமாண்டமாக அமைந்துள்ளது.
இந்த சிலை வைக்கப்பட்டுள்ள வளாகத்தின் முன்பு பலகையில் ” the statue of unity” என்ற வாசகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
அதில் தமிழில் ” ஸ்டேடுக்கே ஒப்பி யூனிட்டி” என மொழிபெயர்த்துள்ளனர்.
இவ்வாறு தமிழ் மொழியை மோசமாக மொழிபெயர்த்து உள்ளதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூகுள் டிரான்ஸ்லேடரில் பார்த்திருந்தால் கூட ” ஒற்றுமை சிலை ” என்று தான் வந்திருக்கும்.
இவ்வாறு இருப்பதை அனைவரும் கண்டித்ததை அடுத்து, தமிழில் மொழி பெயர்த்துள்ள அந்த வசனத்தை மட்டும் பெயிண்ட் மூலம் மறைத்துள்ளனர். இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.