Sembaruthi 05.11.18 : ஆதி, பார்வதியை கோவிலில் பூஜை ஒன்று உள்ளது .அதை பார்வதி தான் செய்யவேண்டும் என்று கூறி அழைத்து செல்கிறார்.
ஆனால், பார்வதி தற்கொலைக்கு முயன்றது ஆதிக்கு தெரியாது. காரிலிருந்து பார்வதி இறங்கும்போது , அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு செல்லும் போதுதான் ஆதிக்கு, பார்வதியின் கையில் இருந்து ரத்தம் வருவது தெரிய வருகிறது.
ஆதி பின்பு கோவிலில் வைத்து பார்வதியிடம் கடவுள் சாட்சியாக , அம்மா குறிப்பிட்ட அந்த தேதியில் உன் கழுத்தில் தான் தாலி கட்டுவேன் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்.
வனஜா, ஐஸ்வர்யாவிடம் நீயும் ஒரு மோதிரத்தை மித்ராவுக்கு அன்பளிப்பாக கொடு, அதை வாங்குகிறாளா என்று பார்க்கலாம் என்கிறார். மித்ரா, மிகவும் கர்வம் பிடித்தவள் , அவள் வாங்க மாட்டாள் என்று வனஜாவும் ஐஸ்வர்யாவும் நினைத்தார்கள்.
ஆனால், இவர்கள் நினைத்ததற்கு நேர் எதிராக நடந்து கொண்டாள் மித்ரா .ஐஸ்வர்யாவிடம் அன்பாக பேசி அவள் அளித்த மோதிரத்தை வாங்கி தன் விரலில் அணிந்துக் கொள்கிறாள்.
அகிலா,குரு ஜி கூறியபடி வீட்டில் உள்ள சொந்தங்களையும், வேலை செய்பவர்களையும் சிவலிங்கபூஜை செய்வதற்கு அழைக்கிறாள்.
அனைவரும் ஹாலில் வந்து நிற்கிறார்கள் .அவர்களிடம் அகிலா ,வீட்டிலுள்ள சொந்தங்கள் ,வேலை செய்பவர்கள் அனைவருமே சிவலிங்கத்திற்கு திருநீறு அபிஷேகம் செய்து பின்பு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யும் பொழுது யாருடைய பூஜை தட்டில் திறுநீரின் நிறம் மாறுகிறதோ !அவர்களால் தான், ஆதி மித்ரா கல்யாணம் தடைப்படும் என்று குருஜி கூறியிருக்கிறார். அகிலா கூறியதைக் கேட்டதும், வனஜா பயத்தில் உறைந்து போனாள்.
அனைவருமே பக்தியுடன் சிவலிங்கத்திற்கு திறுநீறி அபிஷேகம் செய்து பால் அபிஷேகம் செய்கிறார்கள் . அகிலா அனைவரது பூஜை தட்டையும் பார்த்துக் கொண்டே வருகிறார்.
பார்வதியின் பூஜைத்தட்டில் திறுநீறின் நிறம் மாறி இருந்தது. அதிர்ந்து போகிறார் அகிலா. ஆதியும் அருணும் திகைத்து நிற்கின்றனர். அகிலா பூஜை செய்வதை நிறுத்தச் சொல்கிறார்.
அனைவரும் எழுந்திருந்து நிற்கின்றனர் .பார்வதி தனது பூஜை தட்டை பார்த்தவுடன் அதிர்ந்து போகிறார். உடனே அகிலா, ஆதி-மித்ரா திருமணம் நடக்கும் வரை இந்த வீட்டிற்கு நீ ,வரக்கூடாது என்கிறார்.
பார்வதி , உடனே அகிலாவிடும் அம்மா ,நான் உங்கள் மீதும் ,உங்கள் குடும்பத்தின் மீதும் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறேன் என்னால் தடை வருமா என்கிறார்.
அதற்கு அகிலா, குருஜியின் வாக்கு, பரமசிவன் வாக்கு போல் ! ஆதலால் நீ வீட்டை விட்டு வெளியே செல் என்று கூறி விடுகிறார். நாளைய எபிசோடில் வீட்டை விட்டு வெளியேறுவாளா பார்வதி? ஆதி-மித்ரா திருமணம் நடக்குமா ?என்பதை பார்க்கலாம்.