Niharika Konidela With boy Friend : தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க கௌதம் கார்த்திக் ஜோடியாக நிஹாரிகா நடித்திருந்தார்.
தெலுங்கு நடிகரான நாகேந்திர பாபு என்பவரின் மகளான இவர் பாகுபலி பிரபாஸை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் அது உண்மை அல்ல என பின்னர் தெரிய வந்தது. இந்த நிலையில் நிஹரிகா தற்போது தன்னுடைய வருங்கால கணவர் யார் என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலில் தன்னுடைய காதலர் யார் என்று தெரிய பார்த்துக்கொள்வதே சூசகமாக புகைப்படம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் காதலனை கட்டி அணைத்து இந்த நபர் யார் என முகம் தெரியாதபடி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி அந்த நபர் யார் எனக் கேட்க அதன் பின்னர் யார் என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்தியுள்ளார்.
சைதன்யா என்பவரை அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். சைத்தான்யாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நிஹாரிகாவை திருமணம் செய்வது குறித்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.