அரசியலில் நுழைய விஜய் டிராமா போடுகிறார் என பத்திரிகையாளர் ஒருவர் கூறியதற்கு பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார் பார்த்திபன்.
Parthiban About Vijay‘s Political : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். சமீபகாலமாக இவரது படங்களில் அரசியல் பேசப்பட்டு வருவதால் படங்கள் தொடர்ந்து பல பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகிறது.
தளபதி விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கிறது அவர் முதல்வராக வேண்டும் என ஆசைப்படுகிறார் அதனால் தான் அவருடைய படங்களில் தொடர்ந்து அரசியல் பேசி வருகிறார் என தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்தநிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அளித்த பேட்டி ஒன்றில் கமல் அரசியலுக்கு வந்துவிட்டார் ரஜினி வரப் போவதாக கூறுகிறார். விஜய் விஷால் போன்ற நடிகர்களுக்கு அரசியல் ஆசை உள்ளது.
நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா எந்த கட்சியில் இணைவீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த பார்த்திபன் தற்போது அரசியல் கட்சிகளிடையே அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
தளபதி விஜய் எஸ்பிபி இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு ரசிகர் ஒருவரின் செருப்பை எடுத்துக் கொடுத்த வீடியோ செம வைரல் ஆனது. ஒத்த செருப்பு படத்துடன் ஒப்பிட்டு நிறைய மீம்ஸ்கள் வெளிவந்தன.
மேலும் பத்திரிக்கையாளர் ஒருவர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் அதனால்தான் எஸ்பிபி இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார் எனக் கூறியிருந்தார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நாளை அரசியலுக்கு வரப் போவதை வைத்து, எஸ்பிபி இறுதி சடங்கில் கலந்து கொண்டதை வைத்துப் பேசியது சரியல்ல. எதற்கு இப்படி எல்லாம் டிராமா செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இதில் யார் முதல்வர் ஆனால் நமக்கென்ன? யார் துணை முதல்வர் ஆனால் நமக்கு என்ன? மக்களுக்கு நல்லது செய்தால் போதும் என தெரிவித்துள்ளார்.
நடிகர் பார்த்திபனின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.