நான் செத்துட்டதும் இதை மட்டும் செய்துடுங்க என பரவை முனியம்மா உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நாட்டுபுற பாடகியாகவும் குணசித்திர நடிகையாகவும் நடித்து பிரபலமானவர் பரவை முனியம்மா.
நடிகையாகவும் பாடகியாகவும் இருந்தாலும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர், இவருக்கு மாற்று திறனாளி மகன் ஒருவரும் உள்ளார்.
உடல் நலம் குன்றிய போது இவருக்கு ஜெயலலிதா அவர்கள் 6 லட்சம் ரூபாய் நிதியும் மாதம் 6 ஆயிரம் உதவி தொகையை வழங்கினார். மேலும் மருத்துவ செலவுகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பரவை முனியம்மா நான் இறந்த பிறகு எனக்கு கிடைத்து வரும் உதவி தொகையை என்னுடைய மாற்று திறனாளி மகனுக்கு வழங்குங்கள் என கூறி அராசாங்கத்திற்கு கோரிக்கை வைத்து உள்ளார்.
நெட்டிசன்கள் பலரும் பரவை முனியம்மா அவர்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.