எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து இயக்குனர் பாண்டிராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Pandiraj About Etharkum Thuninthavan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க டி இமான் இசை அமைத்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

தற்போது இந்த படம் பற்றி தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார் பாண்டிராஜ். அதாவது என்னுடைய முந்தைய படங்களைப் போல எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இருக்காது, அதிலிருந்து மாறுபட்ட வகையில் இருக்கும்.

jai Bhim படத்திற்கு நடிக்க வாய்ப்பு வந்தது எப்படி – Actor Manikandan Bold Speech | Suriya

சென்னையில் 11,229 தெருக்களில் கொரோனா : சுகாதாரத்துறை நடவடிக்கை

சூர்யாவுக்கு ஹீரோயிஸம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். மாஸ் மசாலா ரசிகர்களுக்கு எதற்கும் துணிந்தவன் திரைப்படம் செம விருந்தாக இருக்கும் என கூறியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.