கண்ணனுக்கு வந்த சர்ப்ரைஸ் பார்சலால் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

Pandian Stores Update 28.08.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். வீட்டுக்கு தெரியாமல் ஓடி ஐஸ்வர்யாவை கண்ணனை திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். தனது வீட்டில் யாரும் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் போது மூர்த்தி மற்றும் தனம் கண்ணில் இருவரும் தென்படுகின்றனர். அதன் பின்னர் தனம் கண்ணன் வீட்டிற்கு இரண்டு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை அனுப்புமாறு சொல்ல ஜீவாவும் கதிரும் அனுப்பி வைத்துவிடுகின்றனர்.

இந்த சர்ச்சை வேதனை அளிக்கிறது : ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா வேண்டுகோள்

வீட்டில் சமைப்பதற்கு பாத்திரங்கள் இருந்தும் பொருட்கள் எதுவும் இல்லை என கண்ணனும் ஐஸ்வர்யாவும் வருத்தப்படுகின்றனர். கண்ணனிடம் மீது இருந்த 128 ரூபாயில் 100 ரூபாய் முறைவாசல் செலவிற்காக சென்று விடுகிறது. கையில் பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் வேலை செய்யும் வேலையால் இந்த பார்சலை கொடுக்கிறார்.

பிரித்து பார்த்தபோது வீட்டிற்கு சமையல் செய்ய தேவையான அனைத்து பொருட்களும் உள்ளது. அது மளிகைப் பொருட்கள் குறித்த லிஸ்ட் ஒன்று உள்ளது. அதனை எடுத்துப் பார்த்த கண்ணன் இது ஜீவா அண்ணா கையெழுத்து என கண்கலங்கி வருகிறார். இந்த மாதிரியான அண்ணனுங்க கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் என கண்ணீர் விடுகிறார்.

முடிவுக்கு வந்த வடிவேலு விவகாரம்! – மீண்டும் தொடங்குகிறதா 24 ஆம் புலிகேசி? | Vadivelu | HD

இன்னொருபுறம் தனத்தின் பிரசவத்திற்கு வீட்டில் உள்ள அனைவரும் தயாராகி வருகின்றனர். தனத்தின் அம்மா மற்றும் மீனா ஆகியோர் பிரசவத்தின் போது எப்படியெல்லாம் வலி ஏற்படும் என்பதை பேசுகின்றனர். அப்போது தனத்திற்கு திடீரென வலி ஏற்பட மீனாவும் முல்லையும் பதறிப் போய் நின்றனர். தனத்தின் அம்மா இது பொய் வழி என கூறி அவரை நடக்கச் சொல்கிறார். அதன்பின்னர் தனத்திற்கும் வலி குறைந்து பழையபடி உள்ளார்.

கடையில் இருந்து மூர்த்தி, கதிர், ஜீவா ஆகியோர் வீட்டிற்கு வந்ததும் முல்லை அக்காக்கு வலி வந்துடுச்சு என கூறுகிறார். உடனே மூணு பேரும் பதறிப்போய் ஜீவா 40 வண்டி புடிச்சிட்டு வரேன் என கிளம்புகிறார். இதன்பிறகு தனத்தின் அம்மா இது பொய் வலி பிரசவத்துக்கு தயாராகும் போது இதெல்லாம் ஏற்படும் என்று கூறுகிறார்.

வலிக்காம குழந்தை பெத்துகறதுக்கு எதுவுமே வழி இல்லையா என ஜூவா கேட்க இதெல்லாம் நான் குழந்தை பெற்றுக்கொள்வது கேட்கவே இல்லையே என மீனா கேட்கிறார். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.