Pandian Stores Update 11.08.21

கண்ணனோட இந்த நிலமைக்கு நான் தான் காரணம் என தனம் கதறி அழுகிறார்.

Pandian Stores Update 11.08.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான கண்ணன் ஐஸ்வர்யாவை திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டதால் மூர்த்தி கண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுகிறார்.

வருத்தத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய கண்ணன் தன்னுடைய நண்பனின் சித்தப்பா வீட்டில் தங்குகிறார். இது கண்ணன் இல்லாததை எண்ணி வீட்டில் அனைவரும் வருத்தப்பட்டு சாப்பிடாமல் இருக்கின்றனர். நடந்ததையே நினைத்துக் கொண்டிருக்காமல் எல்லாரும் சாப்பிடுங்க இப்போ நீங்க சாப்பிடலனா நான் வெளியே போகிறேன் என கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவை தெறிக்கவிட்டு, வங்காள அணி கோப்பையை வென்றது எப்படி?

இதனால் எல்லாரும் சாப்பிடுகின்றனர். கண்ணனை அம்மா சாப்பிடாம எதுவும் பேசாமல் அமைதியாக அழுது கொண்டு இருக்கிறார். தனம் குமரன் என யார் சொல்லியும் அவர் சாப்பிடவில்லை. பின்னர் மூர்த்தி அவரது அம்மாவையும் சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து மாத்திரை கொடுக்கிறார்.

எனக்கு END-ஏ கிடையாது…, மீண்டும் வருகிறார் சின்ன கலைவாணர் விவேக்..! | LOL Enga Siri Paappom | News

எல்லாத்துக்கும் நான்தான் காரணம் கஸ்தூரி அண்ணி அன்னைக்கே சொன்னாங்க. அப்போது கண்ணனை கூப்பிட்டு கண்டித்து இருக்கணும். ரெண்டு பேருமே படிச்சுட்டு இருக்காங்க வெளியே போயிட்டு என்ன பண்ணுவாங்க எங்க தங்குவாங்க எப்படி சாப்பிடுவாங்க. நான் தான் குழந்தை, சீமந்தம்னு கண்ணனை கவனிக்காம விட்டுட்டேன். எல்லாம் என் தப்புதான். நான் கேட்டிருந்தா கண்ணன் எல்லாத்தையும் சொல்லி இருப்பான். கஸ்தூரி அண்ணன் கிட்ட பேசிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணி இருக்கலாம் என அழுகிறார். வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் கண்ணனை நினைத்து வருத்தப்படுவதா மூர்த்தி மீண்டும் தனது வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.