Pandian Stores Update 04.09.21

நகை அடகு வைக்க அடகு கடைக்கு சென்று கண்ணனுக்கு மூர்த்தி மறைமுகமாக உதவி செய்துள்ளார்.

Pandian Stores Update 04.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கண்ணன் வீட்டை விட்டு ஓடி சென்று ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்ட அதிர்ச்சி அவருடைய அம்மாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் குணமடைந்து வரும் நிலையில் அவரைப் பார்க்கச் சென்ற கண்ணன் ஏன் யாரும் பார்க்க விடாமல் அனுப்பிவிட்டனர். இதனையடுத்து வீட்டுக்கு வந்த கண்ணன் வீட்டில் கரண்ட் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறான். பின்னர் வீட்டு உரிமையாளருக்கு போன் செய்து கேட்ட போது கரண்ட் பில் கட்டாம இருக்கும் கட்டி விடு என கூறி விடுகிறார்.

பூஜையுடன் கொடியேற்றம் : வெள்ளை விநாயகருக்கு, சதுர்த்தி விழா தொடங்கியது..

இதனால் என்ன செய்வது என தெரியாமல் இருந்த கண்ணனுக்கு ஐஸ்வர்யா தனது கழுத்தில் இருந்த அரை பவுன் செயினை கழற்றி கொடுக்கிறார். இதனை அடகு வைத்தோ அல்லது விற்று பணம் கொண்டு வா மாமா என கூறி விடுகிறார். கண்ணனும் சதீஷிம் அடகு கடைக்கு செல்கின்றனர். ஒரு கடையில் படிக்கிற பசங்க கிட்ட எப்படி நகை வந்தது? திருடிட்டு வந்தீங்களா என கடைக்காரர் கேட்டு உங்களுக்கு பணம் கொடுக்க முடியாது என கூறி விடுகிறார்.

இதனை அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருக்க முடியும் முன்னர் கடைக்கு செல்கிறான். அங்கே மூர்த்தி என் தம்பி என்பதை அடையாளம் கண்டு கொண்ட அந்த அடகுக் கடைக்காரர் நகையை வாங்கி வைத்துக்கொண்டு சாய்திரம் வாங்க பணம் தருகிறேன் என கூறி விடுகிறார். நகையை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு வீட்டுக்குச் செல்கிறார் கண்ணன்.

Sunny Leone உடன் இணையும் Sathish & GPMuthu! – டைட்டில் உடன் வெளியான Poster | Oh My Ghost

இன்னொருபுறம் தனம் தன்னுடைய அத்தை என் உடல் நிலையை நினைத்து கவலைப்பட குமரன் ஜீவாவும் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். பின்னர் மருத்துவமனையில் சென்று மூர்த்தி என் அம்மாவை அனைவரும் பார்த்து நலம் விசாரிக்கின்றனர். மூர்த்தியின் அம்மா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிருங்கள் என கூறுகிறார்.

வீட்டுக்குச் சென்று நடந்ததை கூறிய கண்ணனை ஐஸ்வர்யா என்ன மாமா இப்படி பண்ணிட்டு வந்து இருக்கீங்க. இப்போ நம்ம கிட்ட நகையும் இல்லை பணமும் இல்லை நீங்க கொடுத்த நகையை கொடுக்கலைன்னா அவர் சொல்லிட்டா என்ன செய்வீங்க? என திட்ட கண்ணன் சரி நாங்க போயிட்டு நகையை வாங்கிக் கொண்டு வரும் என திரும்பவும் நகைக்கடைக்கு திரும்புகிறான்.

பின்னர் அந்த கடைக்காரர் மூர்த்திக்கு போன் செய்து உங்க தம்பி கண்ணன் நகையை கொண்டு வந்து வைத்து பணம் கேட்கிறான் நான் என்ன செய்யட்டும் என கேட்கிறார். முதலில் அவனுடைய விஷயத்தில் நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது எனக் கூறி போனை வைத்து விடுகிறார் மூர்த்தி. அதன் பின்னர் மீண்டும் மூர்த்தி அந்த கடைக்காரருக்கு போன் செய்து நகையை அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுங்க நான் சாயந்திரம் உங்களுக்கு பணம் கொடுத்து விடுகிறேன் என மூர்த்தி கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.