முல்லையாக நடித்து வந்த சித்ரா இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் பாண்டியன் ஸ்டோர் மீனா உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

Pandian Stores Meena About VJ Chithra : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் சித்ரா. இவர் கடந்த வருடம் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவு சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். இன்றுவரை சித்ராவின் இறப்பு அனைவருக்கும் வருத்தம் அளிக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. அவர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முல்லை குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உன்னை இழந்து ஒரு வருடம் ஆகிறது, பார்க்கும் எல்லா இடங்களிலும் நீ இருக்கிறாய். உனக்கான வாழ்வை நீ மீண்டும் பிறந்து வாழ வேண்டும் என பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவோடு சித்ரா உடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Maanaadu OTT-யில் நல்ல லாபம் – K Rajan Bold Speech at Muddy Trailer Launch | HD