மீனாவால் வீட்டில் வெடித்த பிரச்சனையால் தனம் கண்கலங்கி அழுதுள்ளார்.

Pandian Stores Episode Update 24.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். காலையில் எழுந்து டீ போட்டு அனைவருக்கும் கொடுத்த ஐஸ்வர்யா ஜீவாவும் மீனாவும் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் கதவைத் தட்டி டீ கொடுக்கிறார். முதலில் ஜீவா இன்னும் பல்லு துலக்கலை என சொல்ல அட குடிங்க மாமா என குடிக்க வைக்கிறார்‌. டீ குடித்துவிட்டு பாராட்டுகிறார். அதன்பிறகு ரூமுக்குள் போன மீனா டீ குடித்து பார்த்து வைத்துவிட்டு நல்லாவே இல்லை என வைத்துவிடுகிறார். இவ ரொம்ப ஓவரா தான் பண்ணிட்டு இருக்கா என ஐஸ்வர்யா மீது கோபப்படுகிறார்.

அதன் பிறகு குளித்து முடித்துவிட்டு அந்த டீயை எடுத்து வந்து வெளியில் ஊற்றுகிறார். இதனைப் பார்த்த முல்லை டீ நல்லா இல்லையா என கேட்கிறார். நல்லாவே இல்லை, ஆரி போயிடுச்சு என முல்லை கூறுகிறார். இந்த நேரத்தில் ஐஸ்வர்யா கயல் பாப்பாவை தூக்கிக் கொண்டு அவரை சமாதானப் படுத்திக் கொண்டே வருகிறார். என்ன அம்மா நீங்க உங்களுக்கு பொறுப்பே இல்லை குறைந்த அழுதுட்டு இருக்கு என கூறுகிறார். எதுக்கு ஓவரா பேசிட்டு இருக்க. நான் தனம் அக்கா கிட்ட குடுத்துட்டு குளிச்சிட்டு வரத்தானே போனேன் அவங்க எங்கே என கேட்க அவங்க பாண்டியன் அழுதானு ஊஞ்சலாட்ட போயிட்டாங்க என கூறுகிறார்.

பாத்தீங்களா இப்பலாம் அவங்களுக்கு கயல் முக்கியமே இல்லை, அவங்க பையன் மட்டும் தான் முக்கியமா போய்ட்டான். இனி நான் மட்டும் தான் உன்ன பார்த்துக்குவேன். சும்மா பெரியம்மா என தனம் அக்காவை தேடாத என என கூற இதனை தனம் கேட்டு விடுகிறார். அதன்பிறகு தனம் இதையே நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் மூர்த்தி வந்து இடுப்பு வலிக்குதுன்னு சொல்லிட்டே இருந்த ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம் என கூறுகிறார். தனம் நாளைக்கு போகலாம் குழந்தையை யார் பார்த்துப்பா என கூறுகிறார். முல்லை நான் பார்த்துக்கிறேன் என சொல்லி அவர்களை அனுப்பி வைக்கிறார்.

வண்டியில் போகும்போது தனம் அமைதியாகவே இருப்பதால் மூர்த்தி ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு விட்டு என்ன பிரச்சினை என கேட்கிறார். மீனா சொன்ன விஷயத்தை சொல்லி கஷ்டப்படுகிறார். எனக்கு ரொம்ப பயமா இருக்கு, குழந்தைங்க விஷயத்துல வீட்டுல பிரச்சினை வரவே கூடாது என கூறுகிறார். மீனா எதையும் மனசுல வச்சுக்காது என மூர்த்தி சொல்ல இது அவ இரண்டாவது முறையா சொல்கிறா என தனம் கூறுகிறார்.

இந்த பக்கம் மீனா கயல் பாப்பாவை குளிக்க வைத்துக்கொண்டிருக்க அவருக்கு உதவி செய்கிறார் கண்ணன். நான் ரொம்ப குழந்தையை மிஸ் பண்ணேன் என கண்ணன் சொல்லிக்கொண்டே இருக்க மீனா சும்மா பொய் சொல்லாத. நீங்க வந்ததில் இருந்து உங்க அண்ணி பாப்பாவை தானே தூக்கி வைத்து கொஞ்சி கொண்டு இருக்க என சொல்ல கண்ணனின் முகம் மாறுகிறது. இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.