மூர்த்தியை மீறி கண்ணனை வீட்டிற்கு கூட்டி வந்துள்ளார் தனம்.
Pandian Stores Episode Update 14.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ரூமிற்குள் தனத்தை இருந்திருந்தால் கூட இப்படி கண்ணனை இந்த நேரத்தில் அனுப்பி இருக்க மாட்டார். ஆனால் நீங்க பண்ணியது ரொம்ப தப்பு. அவன் தப்பு பண்ணி இருக்கான் தான் அதற்கான தண்டனையை அனுபவித்து விட்டான். அவன் பட்ட கஷ்டங்கள் போதும் இனிமே அவன் நம்மளோடவே இருக்கட்டும் என கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட மூர்த்தி சொல்றதெல்லாம் சொல்லிட்ட இல்ல படுத்து தூங்கு எனக் கூறி படுத்து விடுகிறார்.
இந்தப் பக்கம் கண்ணன் அண்ணன் இன்னும் நீங்க தான் இருக்கியா என்பதுபோல பார்த்தது அதனால் தான் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என ஐஸ்வர்யாவிடம் கூறுகிறார். என்ன இன்னும் என் மேல எவ்வளவு கோவமா இருந்தா என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்திருக்கும். நான் பண்ணது தப்பு என கூறுகிறார். அதன்பிறகு ஐஸ்வர்யா சரி தூங்கு என கூறுகிறார். ஆனால் கண்ணன் மூர்த்தி சண்டையில் நீ எனக்கு தம்பியும் இல்ல நான் உனக்கு அண்ணனும் இல்லை எனக் கூறியதை நினைத்து வருத்தப்படுகிறார்.
மறுநாள் காலையில் அனைவரும் அமர்ந்து கொண்டிருக்க அப்போது கதிர் கயல் பாபாவைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஜீவா வர அப்போது கதிர் கண்ணனை பார்த்தியா எப்படி இருக்கும் என கேட்க அவங்க வீட்டு கதவு திறக்கவே இல்ல என கூறுகிறார். உடனே மீனா நேரா வீட்டுக்குள்ள போய் பார்த்துட்டு வர வேண்டியதுதானே என சொல்ல அந்த நேரத்தில் மூர்த்தி வந்துவிடுகிறார். உடனே மீனா பேச்சை மாற்றி விடுகிறார்.
அதன்பிறகு தனம் உள்ளே இருந்து வெளியே வர ஜீவா நைட்டெல்லாம் தூங்கலையா அண்ணி என கேட்கிறார். தூக்கம் வரல டா என கூறுகிறார். அதன் பிறகு நேராக வெளியில் சென்று போய் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த தனம் மாமா இவ்வளவு நாளா உங்களை கேட்காமல் நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை ஆனா இப்போ ஒரு முடிவை எடுத்திருக்கேன் என சொல்லி விட்டு நேராக கண்ணன் வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு இனி நீங்க தனியா இருக்க வேண்டாம் நம்ம வீட்டுக்கு போகலாம் என சொல்கிறார். கண்ணன் அண்ணா என்ன சொன்னார் வேண்டாம் அண்ணி என சொல்கிறார். இந்தப் பக்கம் மீனாவும் முல்லையும் தனம் எங்கே போனாங்க என வெளியில் வந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தனம் கண்ணனின் கையைப் பிடித்துக் கொண்டு அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியான மீனா உடனே உள்ளே சென்று விடுகிறார். ஜீவா என்னாடி எனக் கேட்க அங்க பாரு என கூற கதிரும் ஜீவாவும் எழுந்து வெளியே பார்க்க அவர்களும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு தனம் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை வீட்டிற்குள் கூட்டி வருகிறார்.
மாமா இனிமே அவங்க நம்ம வீட்டுல தான் இருக்கப் போறாங்க. இருக்கப் போறேன் என்ன உடம்பு சரியாக வரைக்கும் இல்லை இனி எப்பவும் நம்மளோட தான் இருக்கப் போறாங்க என கூறுகிறார். அத்தை சாகறதுக்கு முன்னாடி நாள் என்கிட்ட எவ்வளவு வருத்தப்பட்டு பேசினாங்க தெரியுமா. இந்த குடும்பத்தை விட்டுடாத கண்ணன் விட்டுடாத என அத்தனை முறை சொன்னாங்க. அவங்க சொன்னதை தான் நான் இப்போது செய்து இருக்கேன் என கூறுகிறார்.
மூர்த்தி கோபத்தோடு எழுந்துகொள்ள நீங்க எதுவும் பேசாதீங்க எனக்கு ஒரு அவர் வெளியே சென்றுவிடுகிறார். பிறகு தனது கதிர் மற்றும் ஜீவாவிடம் கண்ணன் இங்கே இருக்கறதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என கேட்கிறார். இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.