கண்ணனை வீட்டை விட்டு மூர்த்தி அனுப்ப அதனால் தனம் கோபம் அடைந்துள்ளார்.

Pandian Stores Episode Update 13.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். மூர்த்தி வீட்டிற்கு வந்ததும் கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டிற்கு கிளம்பினர். அவர்கள் கிளம்பும்போது மூர்த்தி ஒரு வார்த்தைகூட சொல்லாமல் அவர்களைக் கண்டும் காணாமல் இருந்தது தனத்திற்கு பெரும் கோபத்தை உண்டாக்கியது.

எது உலகியல் : அறிந்துகொள், தெரிந்துகொள் : குரு

அனைவரும் சாப்பிட அமர்ந்ததும் தனம் மட்டும் வரவில்லை. மூர்த்தி தனம் எங்கே எனக் கேட்க அக்கா உள்ள இருக்காங்க என கூறுகிறார். அவங்க கோபமா இருக்காங்க என மீனா சொல்ல அதெல்லம் இல்ல கொஞ்சம் கொஞ்சம் வருத்தமா இருக்காங்க என முல்லை சொன்னார். பிறகு மூர்த்தி தனத்தை கூப்பிட வெளியே வந்த அவர் சாப்பிடாமல் அனைவருக்கும் பரிமாறினார். மூர்த்தி சாப்பிடும் நேரத்தில் கண்ணனை எதற்கு வீட்டைவிட்டு அனுப்புனீங்க. அவனை இப்படி அனாதையாக விட்டு விட்டோம் என சொல்ல மூர்த்தி சாப்பிடாமல் எடுத்துச் சென்றுவிட்டார். மற்றவர்களின் சாப்பிடாமல் எழுந்து கொள்ள அவர்களை அதட்டி சாப்பிட வைத்தார் தனம்.

பிறகு ரூமுக்குள் சென்ற பிறகு மீனா ஜீவாவிடம் கண்ணன் அங்கே இருக்கிறது தான் நல்லது என சொன்னார். அவனை வீட்டுக்கு வந்துட்டா எங்க தூங்குவான்? புதுசா கல்யாணம் ஆனவங்க அவங்களுக்கு ரூம் வேணும்னு நம்ம ரூமை வாங்கிடுவாங்க என கூறுகிறார். கதிர் முல்லைக்கு அந்த ரூம் ஸ்பெஷல். தனம் அக்கா ரூம் சரி இருக்காது. அப்புறம் நாம தான் ஹால்ல தூங்கணும் என கூறுகிறார். மாமா போன பிறகு பகலெல்லாம் இங்கு இருக்கட்டும் சாப்பிடட்டும் நைட்ல மட்டும் அவன் அங்கே போய்டட்டும் என சொல்ல இப்படியெல்லாம் யோசிக்க உன்னால் மட்டும் தான் முடியும். உன்ன மாதிரி யோசிக்க இன்னொருத்தி பொறந்து வரணும் என ஜீவா கூறுகிறார்.

இந்தப் பக்கம் ரூமில் கதிர் அமர்ந்திருக்க அப்போது உள்ளே போன முல்லை அவரது தோளில் சாய அவர் காயத்தால் சத்தம் போடுகிறார். உடனே என்னாச்சு என அவர் டி-ஷர்டை கழட்டி பார்க்கையில் உடல் முழுவதும் காயமாக இருப்பதை பார்த்து முல்லை அதிர்ச்சி அடைகிறார். பிறகு என்ன ஆச்சு மாமாவ கூப்பிடவா என கேட்க அதெல்லாம் வேண்டாம் அவர்களுக்கு தெரியக்கூடாது என கதிர் நடந்ததை கூறுகிறார். பிறகு காயத்திற்கு மருந்து போட்டு விட்ட முல்லை இனிமே சண்டைக்கு போக மாட்டேன் என கதிரிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.

இந்தப் பக்கம் ரூமில் மூர்த்தி தனத்திடம் பேச நீங்க ஏன் கண்ணனை மட்டும் இப்படி வெறுக்கறீங்க? அவனை இப்படி அனாதையா விட்டுட்டோம். வரவங்க போறவங்க எல்லாம் அவனை அடிச்சுட்டு இருக்காங்க. தெருவுல யாருக்காவது அடிபட்டால் கூட பதறும் நீங்க உங்க சொந்த தம்பி ஏன் இப்படி விட்டுட்டீங்க என கோபத்தை காட்டுகிறார். இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர் எபிசோட் முடிவடைகிறது.

மறுநாள் காலையில் தனம் மூர்த்தியை மீறி கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் வீட்டிற்கு கூட்டி வருவது போல ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.