கண்ணனுக்கு அடிபட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார் மூர்த்தி.
Pandian Stores Episode Update 11.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கண்ணன் அடிபட்டு கிடக்கும் நிலையில் அவருக்கு சூப் வைத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார் தனம். என்னக்கா இது என மீனா கேட்க சூப் என சொல்கிறார் முல்லை. பிறகு ஐஸ்வர்யாவிடம் என்ன ஐஸ்வரியா எதிர்வீட்டில் இருக்கும் போது அவ்வளவு பேசுவ இப்ப சைலண்ட்டா இருக்க என கேட்கிறார். கண்ணன் பாவம் என ஐஸ்வர்யா சொல்ல ஓ வருத்தத்தில் இருக்கியா என மீனா கேட்கிறார். பிறகு தனம் என்ன இந்த நேரத்துல நக்கல் அடிச்சுட்டு இருக்க என கூறுகிறார்.
பிறகு முல்லை ஏன்டா வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க தெரியுது உனக்கு அவர்களை திருப்பி அடிக்க தெரியலையா என கூறுகிறார். கட்டையால் அடிச்சாங்களா என தனம் கேட்க இல்ல அவங்க நாலு பேரு என கூறுகிறார். பணத்தை நான் எடுக்கலனு சொல்றத விட்டுட்டு அதை கொடுத்து விட்டு வந்து இருக்க என மீனா சொல்ல நான் அப்பவே போலீஸ் ஸ்டேஷன்ல உங்க அப்பா மேல கம்ப்லைண்ட் கொடுக்கலாம்னு தான் சொன்னேன் கண்ணன் தான் கேட்கல என ஐஸ்வர்யா சொல்கிறார்.
எங்கப்பா மேல் கம்ளைண்ட் கொடுக்க பாத்தியா என மீனா கேட்கிறார். பிறகு தனம் கதிர் அமைதியாக இருந்திருக்கலாம் அவனால இப்போ கண்ணனுக்கு என்ன ஆச்சு பாரு என தனம் சொல்கிறார். அந்தப் பையன் தப்பா பேசும் போது அவங்க பார்த்து விட்டு சும்மா இருப்பாங்களா அதான் அவனை அடித்தார என கூறுகிறார். அதான் அடிச்சுட்டாங்க என்ன சொல்கிறார். உடனே ஐஸ்வர்யா அவன் அடிக்கிறதா இருந்தா கதிர் மாமாவை தானே அடிச்சிருக்கணும் கண்ணனை எதுக்கு அடிக்கனும் என சொல்ல உடனே முல்லை கண்ணனை அடித்ததற்காக வருத்தப்படு ஏன் அவரை அடிக்கலனு வருத்தப்படாத என கூறுகிறார்.
இந்தப் பக்கம் கதிர் கண்ணனை அடித்தவனை திருப்பி அடிப்பதற்காக செல்கிறார்.. பிறகு மூர்த்தி கடை கட்டும் இடத்திற்கு வந்து வேலை பார்க்கிறார். அப்போது என் தம்பி கதிர் எங்கே என கேட்க அவர் இப்போதான் வெளியே போனார் என மேஸ்திரி கூறுகிறார். இந்த நேரத்தில் சரியாக கதிர் இந்த இடத்திற்கு வருகிறார் பிறகு எங்கடா போன எனக்கேட்க கதிர் கடைக்கு தான் போயிட்டு வரேன் என கூறுகிறார்.
நான் கடையில் இருந்து தான் வரேன் பொய் சொல்லாத எங்க போயிட்டு வந்த என கேட்கிறார். திரும்பவும் அவனை அடிக்க கிளம்பிடாத, இந்த மாதிரி ஏதாச்சும் பண்ணுவேனு தான் நான் இங்கே வந்தேன் என கூறுகிறார். பிறகு அது சரி இனி எதுவும் செய்யமாட்டேன் என கூறுகிறார். ஆனால் அதற்கு முன்னதாகவே கதிர் கண்ணனை அடித்த அந்த நான்கு பேரை சரமாரியாக அடித்து விடுகிறார். இனி எங்க குடும்பத்தில் இருக்க யார் மீதாவது கைய வச்சீங்க அவ்வளவுதான் என எச்சரிக்கை செய்துவிட்டு வருகிறார்.
இந்த பக்கம் வீட்டில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க அடிபட்ட வேலையிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது என மீனா கண்ணனிடம் கூறுகிறார். எல்லாரும் ஒன்றாக சேர்ந்துட்டோம். இனி இங்கேயே இருந்து விடுவீர்கள் என சொல்கிறார். இந்த நேரத்தில் மூர்த்தி வீட்டிற்கு வர அவர் கண்ணனைப் பார்த்து பேசக்கூட இல்லை. தனம் கண்ணனுக்கு இப்போ வலி பரவாயில்லை என சொல்லியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் கண்ணன் ஐஸ்வர்யாவை கூட்டி கொண்டு வீட்டிற்கு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் முடிவடைகிறது.