Pandian Stores Episode Update 27.12.21

ஐஸ்வர்யாவால் கடுப்பான மீனா ஒரு பக்கம் இருக்க தனமும் கண்டித்துள்ளார்.

Pandian Stores Episode Update 27.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஐஸ்வர்யா நைட்டியில் வருவதை பார்த்து கண்ணன் அதிர்ச்சி அடைந்து பிறகு அவரை உள்ளே கூட்டுச் சென்று இங்கு யாரும் நைட்டி போட மாட்டாங்க, நைட்டியை மாத்திட்டு வா என கூறுகிறார். ஐஸ்வர்யா நல்லா ப்ரீயா தானே இருக்கு என மாற்ற மறுக்கிறார்.

அதன் பிறகு அனைவரும் சாப்பிட அமர்ந்துவிட ஐஸ்வர்யாவை தனம் அழைக்கிறார். கண்ணன் நைட்டியை மாற்றி விட்டு வருவார் என கூறுகிறான். ஐஸ்வர்யா மாற்றாமல் அப்படியே வருவதை பார்த்து மீனா அதிர்ச்சி அடைந்தார். அவர் ஜீவாவைப் பார்த்து முறைக்க ஜீவா உரிமைக்குரல் முறைக்குதே என முனுமுனுக்கிறார்.

2-ந்தேதி, நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி : முன்பதிவு தொடங்கியது

அதன் பிறகு ஐஸ்வர்யாராய் நிற்க வைத்து நைட்டி எல்லாம் போடக்கூடாது என கூறுகிறார். இந்த வீட்டுக்கு நீ ஒரு ரூல்ஸ் இருக்கு இங்கே யாரும் நைட்டி போடமாட்டாங்க என செல்கிறார். ஆனால் மீனா செல்வதையும் கொஞ்சம் கூடக் காதில் வாங்காமல் காமெடி பண்ணாதீங்க என ஐஸ்வர்யா கூறுகிறார். அந்த நேரத்தில் தனம் வர தன்னிடமும் முறையிடுகிறார் மீனா. தனமும் இங்கு யாரும் நைட்டி எல்லாம் போடக்கூடாது அது நல்லா இருக்காது நீ சுடிதாரே போடு என கூறுகிறார். ஆனால் அதையும் ஐஸ்வர்யா கேட்கவில்லை. மாமாங்க வந்ததும் வேட்டி கட்டுகிற மாதிரி தான் இதுவும் என கூறுகிறார்.

படத்துல Fight மிரட்டி இருக்காங்க – Rocky Day 3 Common Audience Review | Vasanth Ravi

நம்ப மாமாங்க போய் எப்படி தப்பா பார்ப்பாங்க? என சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். மீனா என் அக்காவை இப்படி சொல்லிட்டு போறா என கேட்க விடு சின்ன பொண்ணுதானே போகப்போக புரிஞ்சிப்பா என கூறுகிறார். அதன்பிறகு மீனா இதுவே நான் பண்ணியிருந்தா எல்லாரும் குறை சொல்லி இருப்பீங்க என கூறுகிறார்.

பிறகு வீட்டில் ஜீவா, கதிர், மூர்த்தி மற்றும் தனம் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது புதிய வீடு வாங்கி செல்ல வேண்டும் என தனம் கூறுகிறார். மூர்த்தியின் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனதுமே இதை யோசிச்சேன் ஆனா செலவு அடுத்தடுத்து வந்ததால் எதுவும் பண்ண முடியல என கூறுகிறார்.

இந்த வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டலாம் என கதிர் சொல்ல அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் மூர்த்தி. அதன்பிறகு குன்னகுடியை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி காலி இடம் வாங்கி வீடு கட்டலாம் என ஜீவா ஐடியா கொடுக்கிறார். முதலில் கடை கட்டும் வேலை முடியட்டும் என மூர்த்தி சொல்கிறார். நாம அடுத்து செய்ய வேண்டியது வீடு கட்ட வேண்டியதுதான் என தனம் கூறுகிறார். மூர்த்தி நம்பர் வீட்டில் நடக்க போற அடுத்த நல்ல விஷயம் கடை திறப்பாகத்தான் இருக்கும் என கூறுகிறார்.

இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.