பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா மீண்டும் வந்து தனத்திடம் பேசுகிறார்.

Pandian Stores Episode Update 27.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அம்மாவின் மறைவைத் தொடர்ந்து வீட்டில் அனைவரும் சோகமாகவே இருந்து வருகின்றனர். முல்லையின் அப்பா அம்மாவும் வீட்டிற்கு கிளம்பி விட்டனர்.

ராகு, கேது மற்றும் சனி தோஷம் விலக வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்..

அதன் பின்னர் தனம் கண்ணனுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்புகிறார். பின்னர் ஒரு ரூமில் படுக்க சென்ற தனமும் மூர்த்தியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இனி தம்பிங்களுக்கு அப்பாவுக்கு அப்பாவா இருந்து பார்த்து கிட்ட மாதிரி அம்மாவுக்கு அம்மாவா இருந்து பார்த்துக்கணும். அம்மா இல்லன்னு ஒருநாளும் அவங்க ஏங்க கூடாது என கூறுகிறார். பின்னர் தனம் கண்ணனுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பியதாக கூறுகிறார். எல்லாரு மாதிரியும் கண்ணன் மேல பழி போடாதீங்க. அவன் ஏதோ பண்ண ஏதோ நடந்துடுச்சு. நமக்கு நாளும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலுக்கு ஆள் இருக்கும் ஆனா அவன் தனியாவே அழுது தனியாவே ஆறுதல் தேடிக்கணும். அதனால தான் அவனுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பினேன் என கூறுகிறார்.

Seafarer Ashwin Surprise His Wife Deepa Vani | Flash Mob | First Time In Chennai

மேலும் அம்மா கொஞ்ச நாளைக்கு இருந்திருக்கலாம். நம்ம குழந்தையை பார்த்துட்டு போயிருக்கலாம் என கூறுகிறார். அதன் பின்னர் தனம் படுத்து தூங்க அவரது கனவில் லட்சுமி அம்மா வருகிறார். வீட்டிற்குள் வந்த அவர் தனத்தைப் பத்தி ஏன் எல்லாரும் அழுகறீங்க.. நான் இங்கே தான் இருக்கிறேன். நீ இருக்கிறனு தானே நான் போனேன். எல்லாரையும் பார்த்துக்கொண்டு சொல்லிட்டு தானே போனேன். என் பிள்ளைங்க அழுவதை என்னால பார்க்க முடியல. உன் குழந்தையை நான் பார்ப்பேன். முதல்ல நீ அழுகாத ‌‌. எல்லாரையும் பத்திரமா பாத்துக்க என கூறிவிட்டு வெளியே செல்கிறார். இதையடுத்து தனம் அத்தை என தூக்கத்திலிருந்து எழுந்து கொள்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.