தனத்தின் குழந்தை விடாமல் அழுததால் பால் கொடுத்துள்ளார் மீனா.
Pandian Stores Episode Update 25.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். மீனா கயலை குளிப்பாட்டி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருக்கு உதவியாக கண்ணன் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது கண்ணன் கயல் பாப்பாவை ரொம்ப மிஸ் பண்ணேன் என சொல்ல மீனா நீ இங்க வந்ததிலிருந்து பாண்டியனை தான் தூக்கி வைத்து கொஞ்சி கொண்டு இருக்க. சும்மா பொய் சொல்லாதே என கூறுகிறார். கண்ணன் எதையெதையோ சொல்லி சமாளிக்க மீனா அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் ஐஸ்வர்யா ஏன் கா உங்களுக்கு தனம் அக்காவுக்கு குழந்தை பிறந்தது பிடிக்கலையா என கேட்கிறார். இதனால் மீனா அதிர்ச்சி அடைகிறார். இந்த மாதிரி எல்லாம் பேச வேணாம்னு உன் பொண்டாட்டிகிட்டே சொல்லிவை என கண்ணனிடம் கூறுகிறார்.
அதன்பிறகு தூக்கத்தில் இருந்த பாண்டியன் எழுந்து அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார் முல்லை. ஆனால் அவன் அழுகையை நிறுத்தாததால் ஐஸ்வர்யா, கண்ணன் என மாறி மாறி அனைவரும் தூக்கி சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர். அப்போ உன் சமாதானம் ஆகாததால் முல்லை தனத்திற்கு போன் செய்து பாப்பா அழுது கொண்டே இருப்பதாக கூறுகிறார்.
அதற்குள் மீனா குழந்தையை வாங்கிக் கொண்டு ரூமிற்கு சென்று விடுகிறார். தனம் பதறிப் போய்க் வீட்டிற்கு ஓடி வர முல்லை குழந்தையை மீனா வைத்திருக்கிறார் இப்ப கொஞ்சம் பரவாயில்ல சமாதானம் ஆகி விட்டான் என கூறுகிறார். தனம் மீனாவின் ரூமுக்குச் சென்று பார்த்தபோது அங்கு மீனா குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். ரொம்ப அழுதுக்கிட்டே இருந்தான். இவனுக்கு புட்டிப்பால் கொடுத்து பழக்கம் இல்ல இல்ல அதுதான் நானே பால் கொடுப்பேன் என மீனா கூறுகிறார். தனத்திற்கு ஒரே சந்தோஷம். மேலும் மீனா இனிமே குழந்தையை ஒருத்தர் ஒருத்தர் விட்டு போகலாம் என கூறுகிறார்.
பிறகு இந்த விஷயத்தை மூர்த்தியிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார் தனம். நமக்கு குழந்தை பிறந்ததால் இந்த குடும்பம் பிரிந்திடுமோனு பயந்தேன் ஆனால் எனக்கு இப்போ அந்த பயம் இல்லை என கூறுகிறார். அதன் பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டே இருக்க அந்த நேரத்தில் ஐஸ்வர்யா நைட்டில் வருவதை பார்த்து கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். இதனை திரும்பிப் பார்த்து மீனாவும் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அடுத்து வெளியான ப்ரோமோவில் மீனா இங்க நைட்டி எல்லாம் போடக்கூடாது என ஐஸ்வர்யாவிடம் கூறுகிறார்.