ஜீவாவிடம் அழுதுகொண்டே சண்டையிடுகிறார் மீனா.
Pandian Stores Episode Update 25.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். ஜீவாவிடம் மீனா கயலை யாரும் கண்டு கொள்வதில்லை என கூறி கண் கலங்கினார். ஜீவா அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அவன் புதுசா வந்து இருக்கான் என்பதால் அவன் மீது கொஞ்சம் எல்லோருக்கும் அக்கறை உள்ளது. நாளைக்கு நமக்கு இரண்டாவது குழந்தை பிறந்தால் அதை தான் அதிகமாக கவனிப்போம் அதற்காக கயல் மீது அக்கறை இல்லை என்றாகிவிடாது. நீயா மனச போட்டு எதுவும் குழம்பாத, நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கல படுத்து தூங்கு என மீனாவை சமாதானம் செய்கிறார். மேலும் என்கிட்ட எவ்வளவு வேணும்னாலும் சண்டை போடு, ஆனா இப்படி வருத்தப்படாத எனக்கு கஷ்டமா இருக்கு என சொல்கிறார்.
இந்தப் பக்கம் தனத்தின் குழந்தை அழுவ கதிரும் முல்லையும் தூக்கத்திலிருந்து எழுந்து கொள்கின்றனர். முல்லை குழந்தையை நான் பார்த்து வருகிறேன் என கதவை திறக்க அதற்குள் குழந்தை அழுகையை நிறுத்தி விடுகிறது. அதன் பின்னர் இருவரும் பேசிக்கொள்ளும் போது கதிர் வீட்ல ஒரே குழந்தை சத்தமா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு என சொல்கிறார். உங்களுக்கும் குழந்தை பெத்துக்க ஆசை வந்துருச்சு என முல்லை சொல்கிறார். பிறகு கதிர் பெத்துக்கலாம்.. வீட்டில் மூணு குழந்தைங்க ஆயிடுச்சின்னா எப்படி வளர்க்கிறது என சொல்ல இப்படி சொல்லிச் சொல்லித்தான் ரெண்டு வருஷம் போயிடுச்சு என முல்லை சொல்கிறார்.
நமக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆயிடுச்சில என கேட்க ஒரு வருஷம் தான் உங்களுக்கு என்னை பிடிக்கவே இல்லையே என முல்லை செல்கிறார். உனக்குத்தான் என்ன பிடிக்கல அழுக்கு சட்டையை பிடிக்கல, தாடிய பிடிக்கல என சொல்கிறார். தாடியை பிடிக்கலைன்னு யார் சொன்னா என முல்லை சொல்கிறார். ஆஸ்பத்திரியில் குழந்தையை தூக்கும் போது உங்களோட ரியாக்சன் எப்படி இருக்குன்னு பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு என முல்லை சொல்கிறார். பின் கதிர் அதனை நினைத்து பார்த்து கண் கலங்குகிறார். ஒரு பையன் ஒரு பொண்ணு ஒன்னு ரெண்டு குழந்தை பெத்துக்கலாம் என சொல்கிறார்.
மறுநாள் கண்ணன் பூச்செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் தனத்தின் குழந்தை அழுவது போல சத்தம் கேட்கிறது. பின் பக்கத்தில் இருந்துதான் சத்தம் வருகிறது என பின்பக்கம் சென்று பார்த்த போது குழந்தையை குளிக்க வைத்து கொண்டிருக்கின்றனர். கண்ணன் பின்புற பக்கமாகச் சென்று குழந்தையை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்.
மறுநாள் கதிரும் முல்லையும் கட்டிடம் கட்டும் இடத்தில் இருக்க கதிர் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து முல்லை நீங்க எதுக்கு இதெல்லாம் செய்யறீங்க என அவரை அழைத்துக் கொண்டு வருகிறார். அந்த நேரத்தில் பேங்கில் இருந்து ஒருவர் வந்து இந்த இடத்தில் ஏடிஎம் கட்டலாம் என சொல்கிறார். ஒரு லட்சம் அட்வான்ஸ் பத்தாயிரம் வாடகையும் தருகிறோம் என சொல்கிறார். அண்ணனிடம் பேசி விட்டு சொல்கிறோம் என கதிர் சொல்லி அனுப்புகிறார். முல்லையும் கதிரும் இது நல்ல ஐடியாவா இருக்கு மாமா சரினு தான் சொல்லுவார் என பேசிக் கொள்கின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.