தூக்கத்தில் இருக்கும் மீனாவை ஐஸ்வர்யா வெறுப்பேற்றி உள்ளார்.

Pandian Stores Episode Update 23.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கயலின் பிறந்தநாள் முடிந்தும் மீனாவின் அப்பா அம்மா வீட்டிற்கு கிளம்புகின்றனர். கயலுக்கு மொட்டை போட ஒரு நல்ல நாளா பார்த்து சொல்லுங்க என அவர்கள் கூறி விட்டு செல்கின்றனர்.

அதன்பிறகு தனம் கயலுக்கு எங்கயாச்சும் வெளிய போகும்போது மட்டும் நகை போட்டு விடலாம். எல்லா நேரமும் போட்டுட்டு இருந்தா ஒரு மாதிரி ஆகிவிடும் என வாங்கிய நெக்லஸை கழட்டி மீனாவிடம் கொடுக்கிறார். மீனா எங்க பீரோவில் எங்க வைக்கிறது நீங்களே வச்சுக்கோங்க என சொல்ல தனம் அதை எடுத்துச் சென்று பீரோவில் வைத்துவிட்டு வருகிறார்.

அதன் பிறகு கயல், ஜீவா மற்றும் மீனாவை நிற்கவைத்து திரிஷ்டி கழிக்கிறார். கயல் பெரியவளா வளர்ந்துட்டா நாளைக்கு எல்லாரையும் சித்தப்பா பெரியப்பா பெரியம்மா சித்தி என அழகா பேசிகிட்டு இந்த வீடெல்லாம் சுத்துவா. அதெல்லாம் நினைத்துப் பார்க்கும்போதே சந்தோஷமா இருக்கு என கண் கலங்குகிறார் தனம். தனம் அப்படி போனதும் மீனா பார்த்தியா நகையை வாங்கிட்டு போயிட்டாங்க என சொல்ல ஜீவா நீதானடி சொன்ன என கூறுகிறார்.

அதன்பிறகு ரூமிற்குள் கதிர் முல்லை பாண்டியன் பாப்பாவை கொஞ்சிக் கொண்டு இருக்கின்றனர். நாளைக்கு நமக்கு குழந்தை பிறந்தாலும் இப்படித்தான் நடுவுல இருக்கும் அழகா நம்மளோட கை போட்டு தூங்கும் என கூறுகிறார். அதன்பிறகு தனம் வந்து நீங்க தூங்குங்க என பாப்பாவை தூக்கிக் கொண்டு செல்ல நமக்கும் குழந்தை பிறக்கும் தானே என முல்லை வருத்தப்பட கதிர் கண்டிப்பாக எல்லாம் நடக்கும், நீ சொல்ற மாதிரியெல்லாம் நடக்கும் என கூறி அவரை தூங்க செல்கிறார்.

இந்தப் பக்கம் ஜீவா ரூமுக்குள் இருக்க அப்போது வந்த மீனா பழையபடி நம்ம கிட்ட பணம் இல்ல நாளைக்கு நம்ம எப்படி பாண்டியன் பிறந்த நாளைக்கு ஏதாவது செய்யறது. எதுவாக இருந்தாலும் அவங்க கிட்ட தான் கேக்கணும் என குறை சொல்ல ஆரம்பிக்கிறார். இன்னைக்கு நல்ல நாளில் சந்தோஷமா இருக்கலாம் என ஜீவா சொல்ல நான் போய் தேடி எடுத்துகிட்டு வரேன் என மீனா கேக் எடுத்து வந்து சாப்பிடுகின்றனர்.

மறுநாள் காலையில் எழுந்ததும் தனம் வாசலை பெருக்க வெளியே சென்றபோது வாசல் சுத்தம் செய்து பெரிய கோலமாக போடப்பட்டிருந்தது பார்த்து ஷாக் ஆனார். அதன்பிறகு முல்லை கையில் டீ-யுடன் வருவதைப் பார்த்து அதற்குள் டீயா என தனம் கேட்ட ஆமாங்க ஆனா நான் போடல எல்லாம் ஐஸ்வர்யாதான் என்ன ஐஸ்வர்யா செய்த வேலைகள் பற்றி சொல்கிறார். பிறகு ஐஸ்வர்யா அவருக்கு டீ எடுத்து வந்து கொடுக்கிறார்.

அதன் பின்னர் மூர்த்தி கதிருக்கு டீ கொடுத்த ஐஸ்வர்யா என்ன ஜீவா தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களை கதவைத் தட்டி எழுப்புகிறார். இதனால் மீனா கடுப்பாகி வெளியே எழுந்து வர இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.