கயல் பிறந்த நாளைக்கு வந்த மீனாவின் அப்பா அம்மாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எதிர்பாராத ஷாக் கொடுத்துள்ளது.
Pandian Stores Episode Update 22.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கயல் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வீட்டில் கோலாகலமாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முல்லை கதிர் இடம் வந்து பலூன் வாங்கிட்டீங்களா எனக்கேட்க அவர் இல்லை மறந்துட்டேன் என கூறுகிறார். கயலுக்கு பிங்க் கலர் பலரும் ரொம்ப பிடிக்கும் வாங்கிட்டு வரச்சொன்னால் போயிட்டு வாங்கிட்டு வாங்க என கூறுகிறார். அந்த நேரத்தில் ஐஸ்வர்யா ஒரு கவரை எடுத்து வந்து என்ன என கேட்க அதற்குள் பலூன்கள் இருக்கின்றன. பிறகு குழந்தைக்கு பிறந்த நாள் பலூன் வாங்காமல் இருப்பேனா என கதிர் இருக்கிறார்.
பிறகு ஐஸ்வர்யா முல்லையை அத்தை என சொல்லி வெறுப்பு ஏற்றுகிறார். அத்தகைய சொன்னா பல்லை கைல கொடுத்து விடுவேன் என திட்டுகிறார் முல்லை. அதன் பிறகு ஐஸ்வர்யா, முல்லை, தனம் என அனைவரும் பலூன் ஊதுகின்றனர்.
இந்தப் பக்கம் மீனா எங்க அப்பா பாத்தியா தங்கத்துல செயின் வளையல் எல்லாம் வாங்கிட்டு வந்தாரு உங்க வீட்ல என்ன பண்ணாங்க? நீயும் ஒன்னும் சேர்த்து வைக்கலை என் பொண்ணுக்கு எப்படி கல்யாணம் பண்ண போறேன்னு தெரியல என சொல்ல ஜீவா அவை இன்னும் சரியா நடக்க கூட ஆரம்பிக்கல அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் யோசிக்கிற என கூறுகிறார். இந்த நேரத்தில் உள்ளே வந்த தனம் பாப்பாவை குளிக்க வைத்து தூங்க வைக்கலாம் அப்பதான் சாயந்தரம் பிரஷ்ஷாக இருப்பா என சொல்லி குழந்தையை தூக்கிக் கொண்டு செல்கிறார்.
பிறகு மாலையில் பங்ஷனுக்காக அனைவரும் கூடும் நேரத்தில் மூர்த்தியின் தனமும் கயல் பாப்பாவை வைத்துக்கொண்டிருக்க அவங்கதான் கேட் வெட்டுவாங்களா? நீதானே கயலுக்கு அம்மா போய் குழந்தையை வாங்கு என மீனாவின் அம்மா கூறுகிறார். பிறகு தனம் நீ எதுக்கு அங்க நின்னுட்டு இருக்க வா என மீனாவை அழைத்து குழந்தையை கொடுக்கிறார். ஜீவா ஒரு நிமிஷம் என சொல்லிவிட்டு அம்மாவின் புகைப்படத்தை எடுத்து வந்து அங்கு பக்கத்தில் வைக்கிறார். அதன்பிறகு கேக் கட் செய்ததும் தனம் நெக்லஸ் செய்ய எடுத்து வந்து கழுத்தில் போட்டு விடுகிறார். மீனா உட்பட அவருடைய அப்பா அம்மாவும் இதைப்பார்த்து ஷாக் ஆகின்றனர்.
அதன் பிறகு போஸ்ட் ஆபீஸில் கயல் பெயரில் RD ஓபன் செய்த நிலையில் அதனை கொண்டு வந்து வீட்டிற்குக் கொடுக்கிறார் ஒருவர். மீனா அது என்ன என கேட்க தனம் அப்புறம் சொல்றேன் என கூறி விடுகிறார். ஆனால் மூர்த்தி அது ஒன்னும் இல்ல கயலுக்கு ஒரு வயசாயிடுச்சு இல்ல அவங்க பேர்ல போஸ்ட் ஆபீஸ்ல ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் பண்ணி இருக்கோம். 20 வருஷம் கழிச்சு அந்த பணத்தை எடுத்துக்கலாம். மாச மாசம் ஐந்தாயிரம் கட்டணும் என கூறுகிறார்.
கயலுக்கு உங்க வீட்ல இருக்கவங்க ஒண்ணுமே செய்ய மாட்டார்கள் என மீனாவின் அப்பா அம்மா கூறிய நிலையில் மூர்த்தி தனம் செய்த இந்த செயல் அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.